அழகான தங்கச்சி பாப்பாவை கையில் ஏந்திய 19 வயது அக்கா! வெளியிட்ட உருக்கமான பதிவு
'சித்தி 2' மற்றும் 'பாக்யலட்சுமி' சீரியல்களில் நடித்து வருபவர் நேகா மேனன்.
குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய நேகா, 'நாரதன்' மற்றும் 'ஜாக்சன் துரை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2002ம் ஆண்டில் பிறந்த நேகாவுக்கு, 19 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கச்சி பாப்பா பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
ஒரு சகோதரியை போன்று, அம்மாவை போன்று தன்னுடைய தங்கையை அன்புடன் கவனித்துக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தங்கச்சி பாப்பாவை கையில் ஏந்தியபடி, நேகா உருகத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், நீங்கள் அனைவரும் அவள் மீது செலுத்தும் அன்பால் நெகிழ்ந்து விட்டோம், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.
அவளை சிக்கு, பூந்தி என செல்லமாக அழைப்போம், அம்மா, அக்கா என இரண்டும் ஒருசேர பாப்பாவை பார்த்துக்கொள்வதில் மகிழ்ச்சி.
வைரத்தை போன்று அவள் ஜொலிக்கிறாள், அவளுடன் சேர்ந்து நாங்களும் வளரவிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.