Neeya Naana: அப்பாவின் பிறந்தநாளில் மகன் வடித்த கண்ணீர்... சோகத்தில் மூழ்கிய நீயா நானா
நீயா நானா நிகழ்ச்சியில் விலகிச் செல்லும் Teenage பிள்ளைகள் மற்றும் பரிதவிக்கும் அப்பாக்கள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் விலகிச் செல்லும் Teenage பிள்ளைகள் மற்றும் பரிதவிக்கும் அப்பாக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அப்பாக்கள் மீது பாசம் வைத்திருக்கும் பிள்ளைகள் அரங்கத்தில் கண்கலங்கியுள்ளனர். இதனை அவதானித்த சில அப்பாக்களும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.
இதுவரை பேசப்படாத ஏக்கமும் மனஉணர்வும் வெளிப்படையாக பேசப்படுகின்றது. குறித்த நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களின் உண்மைத்தன்மையை அச்சுஅசலாக காட்டியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |