Neeya Naana: மதம் கடந்து கொண்டாடப்படும் திருவிழாக்கள்... நெகிழ வைக்கும் நீயா நானா விவாதம்
நீயா நானா நிகழ்ச்சியில் மதங்களைக் கடந்து கொண்டாடப்படும் தமிழ்நாட்டு திருவிழாக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் மதங்களைக் கடந்து கொண்டாடப்படும் தமிழ்நாட்டு திருவிழாக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

நாளைய தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்த வார நீயா நானா ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் மதங்களைக் கடந்து மனிதர்களின் பாசத்தை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு திருவிழாக்களிலும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கழுத்தில் போடப்பட்ட மாலை பள்ளிவாசல் ஜமாத் தலைவருக்கு அணிவிக்கப்பட்டது. திருவிழாக்கள் மட்டுமின்றி எந்தவொரு வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும், பாகுபாடு கிடையாது என்பதையும் அரங்கத்தில் அழகாக கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |