Neeya Naana: வரதட்சணை கொடுமையில் கோபிநாத்தை இழுத்த பெண்! அரங்கத்தில் அரங்கேறிய காமெடி
நீயா நானா நிகழ்ச்சியில் வரதட்சணை சிக்கல் குறைந்திருக்கிறதா? பெருகியுள்ளதா? என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் வரதட்சணை சிக்கல் குறைந்திருக்கிறதா? பெருகியுள்ளதா? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண்கள் வரதட்சணையைக் குறித்து பேசியுள்ளார். சமீபத்தில் 300 பவுன் நகையை வரதட்சணையாக கொண்டு சென்ற பெண் திருமணமான 2 மாதத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதனால் தற்போது வரதட்சணை என்பது அதி முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. இதில் பெண்கள் வரதட்சணையைக் குறித்த உண்மையினை உடைத்துள்ளனர்.
ஒரு பெண் மட்டும் மாப்பிள்ளைக்கு ஆடை எடுத்துக் கொடுப்பதைக் குறித்து பேசுகையில், கோட் சூட்டையும் கோபிநாத்தையும் இணைத்து வைத்து பேசி அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |