Neeya Naana: அண்ணி கூறிய ஒற்றை வார்த்தை! அரங்கத்தில் கண்ணீர் சிந்திய பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமணத்திற்கு காத்திருக்கும் நாத்தனார் மற்றும் அண்ணி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியான இதனை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே இவரே தொகுத்து வழங்கி வருகின்றார். இவரது பேச்சுத்திறன் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் திருமணத்திற்கு காத்திருக்கும் நாத்தனார் மற்றும் அண்ணி என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் நாத்தனார் தனது அண்ணி வந்த பின்பு ஏற்பட்ட மாற்றத்தினைக் குறித்தும், அவர்கள் சில தருணங்களில் பேசும் பேச்சினைக் குறித்தும் அரங்கத்தில் கூறி கண்கலங்கியுள்ளனர்.

ஆனால் சிலர் தோழிகள் போன்றும், அக்கா தங்கை போன்றும் மகிழ்ச்சியாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இவர்களின் வாதத்தினை கேட்ட கோபிநாத் இரண்டு பக்கமும் எந்தவொரு மனஸ்தாபம் இல்லாமல் தனது வாதத்தினை வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |