ரூல்சை மீறிய கோபிநாத்! கணவரை அசிங்கப்படுத்திய பெண் - பதிலடி கொடுத்த காட்சி
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறது.
பல லைவ் விவாத நிகழ்ச்சிகளுக்கும் நீயா நானா தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த வாரமும் இந்த நிகழ்ச்சி சிறப்பான தலைப்புடனேயே களமிறங்களியுள்ளது.
கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள், இந்த மாற்றத்தை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்ற தலைப்பில் இந்த வாரம் நீயா நானா ஷோ களமிறங்கியது.
இதில் தன்னுடைய குழந்தையின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை படிக்காத தன்னுடைய கணவன், ஒரு மணிநேரம் எழுத்துக் கூட்டிப் படிப்பதாக அதிகம் படித்து வேலைக்கு செல்லும் மனைவி தெரிவித்தார்.
இந்த விஷயம் குறித்து பேசிய அந்த கணவர், தான் அதிகமாக மதிப்பெண்களை எடுக்காத நிலையில், தன்னுடைய மகள், அதை எட்டியது குறித்து தான் அதிகமாக பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த அப்பா தனக்கு காவியமாக தெரிவதாக குறிப்பிட்ட கோபிநாத், நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் பரிசை நிகழ்ச்சியில் இடையிலேயே அந்த நபருக்கு கொடுத்து பெருமிதப்படுத்தினார்.