வேப்பிலை அரைத்து போடுங்க.. முகப்பரு காணாமல் போகுமாம்- நடிகை ஸ்ருதிகா பியூட்டி சீக்ரெட்
”அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழி ஒன்று உள்ளது.
அதாவது நாம் மனதில் என்ன நினைக்கின்றோம்? என்பதை நம்முடைய முகம் தான் மற்றவர்களுக்கு காட்டும். முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் மனம் அமைதியாக இருப்பது அவசியம்.
பெண்கள் மற்றும் ஆண்களின் முக அழகை கெடுக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.
முகத்தில் முகப்பருக்கள் குவிந்து விட்டால், யாராலும் முகத்தை பார்க்க முடியாது. பெண்களுக்கு சில ஹார்மோன்கள் மாற்றத்தினாலும் பருக்கள் வர வாய்ப்பு உள்ளது. அப்படி இருப்பவர்கள் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் செய்து பார்க்கலாம்.
உதாரணமாக நடிகை ஸ்ருதிகா முகப்பருக்கள் வராமல் இருப்பதற்காக முகத்திற்கு வேப்பிலை அரைத்து போடுவதாக பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
அந்த வகையில், முகப்பருக்கள் இல்லாத முகத்தையும், பளபளப்பாக இருக்கும் அழகையும் வேப்பிலையை வைத்து எப்படி பெறலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பலன்கள்
1. சுருக்கம் இல்லாத, தெளிவான, களங்கமற்ற சருமத்தை நீங்கள் விரும்பினால் அடிக்கடி வேப்பிலையால் தயாரிக்கப்பட்ட பேஸ் மாஸ்க்களை பயன்படுத்தலாம்.
2. ஆயுர்வேதத்தில் வேம்புக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. முகத்தில் அப்ளை செய்யும் பொழுது சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்த்து போராடுகிறது.
3. சிலருக்கு முறையற்ற பராமரிப்பு காரணமாக சரும தொற்றுகள் அதிகமாக இருக்கும். இப்படியானவர்கள் வேப்பிலை பேக் போடலாம். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை சேதமடைந்த செல்களுக்கு உயிர்க் கொடுக்கும். அதே சமயம், மெலனின் உருவாவதைத் தடுக்கும்.
4. முகப்பருக்கள் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் பேக்குகளை தவறாமல் அப்ளை செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
வேப்ப இலை - ½ கப்
தண்ணீர் - 1 முதல் 2 டீஸ்பூன்
தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
பேஸ் பேக் தயாரிப்பது எப்படி?
- முதலில் வேப்பம் இலை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். வேப்பம் இலை அரைத்த கலவையுடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
- சுமாராக 20- 25 நிமிடங்கள் வரை உலர விடவும். அதன் பின்னர் முகத்தை சாதாரண நீரில் கழுவினால் முகப்பருக்கள் நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.
- வாரத்திற்கு 2 முறை தடவினால் சரும பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அதே சமயம், கருவளையம் மற்றும் சுருக்கங்கள் பிரச்சனைகளும் குறைய ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |