தலைமையாசிரியருடன் நயன்தாரா எடுத்த புகைப்படம்! நடிகையான பின்பு பள்ளிக்கு திடீர் விசிட்
நடிகை நயன்தாரா நடிகையான பின்பு அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் திரையுலகில் தற்போதும் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலர் விக்கியை திருமணம் செய்தார். இவர்களது திருமணமத்திற்கு பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், புகைப்படங்களும் தீயாய் பரவி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணத்திற்கு பின்பு வெளியான திரைப்படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
தலைமை ஆசிரியருடன் நயன்தாரா
இந்நிலையில் நடிகை நயன்தாரா படித்த பள்ளி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவல்லா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அங்கிருக்கும் O.E.M என்ற பப்ளிக் பள்ளியில் தான் நயன்தாரா படித்து இருக்கிறார்.
மேலும், நடிகையான பின்னர் அந்த பள்ளியில் தனக்கு பிடித்த நபர் உடன் நயன்தாரா புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.