விக்கியை பிரியாமல் இருப்பதற்கு நயன்தாரா செய்த காரியம்! கொண்டாடும் ரசிகர்கள்
நயன்தாரா செய்திருக்கும் காரியத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை அவர் சமந்தா செய்த தவறை செய்யவில்லை என்கிறார்கள்.
நயன்தாரா விக்னேஷ்
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மறுநாள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்கள்.
அதன் பிறகு நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சிக்கு சென்று அவரின் உறவினர்களுடன் நேரம் செலவிட்டனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவரவர் வேலையில் பிசியாக இருப்பதால் தேனிலவுக்கு செல்ல நேரமில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார்கள். முன்னதாக நயன்தாரா தேனிலவுக்கு செல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியானதும் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
சாமர்த்தியமாக நயன் செய்த காரியம்
சமந்தா இப்படித் தான் திருமணமான கையோடு தேனிலவுக்கு செல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பினார். அவரின் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது.
நயன்தாராவும், அதே தவறை செய்யப் போகிறாரே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால் அவர்கள் பயந்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை.
நயன்தாராவின் காதல், திருமணத்தில் முடிந்ததில் அவரை விட அவரின் ரசிகர்கள் தான் அதிக சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு திரும்பியதும் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிடுவார் நயன்தாரா. அஜித்தின் ஏ.கே. 62 பட வேலையில் கவனம் செலுத்தப் போகிறார் விக்னேஷ் சிவன்.