நயன்தாராவே விரும்பி பார்க்கும் சீரியல் எதுன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்!
நடிகை நயன்தாரா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை மிகவும் விரும்பி பார்ப்பாராம். அது என்ன சீரியல் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார்.
20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது. தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை மிகவும் விரும்பி பார்ப்பாராம். அது என்ன சீரியல் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது வேறெதுவுமில்லை, சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை தான் நயன் விரும்பி பார்ப்பாராம். சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர், ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள இந்த சீரியலை ஒரு எபிசோடு விடாமல் பார்த்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |