கோடிகளில் சம்பளம் வாங்குபவர் இப்படியா செய்வது? ரோட்டுக் கடையில் நயன்தாரா செய்த காரியம்! சரமாரியாக கேட்கும் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா சாலையோர கடையில் பேரம் பேசி பேக் வாங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அங்கீகாரத்தை பெற்றவர் நயன்தாரா. இவர் தமிழில் நடித்த அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது முன்னணி ஹீரோயினாக வலம்வருகின்றார்.
சமீபத்தில் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்கில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
இதை தொடர்ந்து, காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா இவ்வாறு சாலையோர கடைகளில் பேரம் பேசி வாங்கும் காட்சி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதே நேரத்தில் இந்த வீடியோ, திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே நயன்தாரா ரோட்டுக் கடையில் பேரம் பேசி கை பை வாங்கினாரா? என்பது குறித்து சரியான தகவல் தெரியவில்லை.
Women Will Be Always Women 💃🙈 The Way She's Bargaining With The Seller 😍 Ayyoo So Cutiee 💓#LadySuperStar #Nayanthara @NayantharaU pic.twitter.com/4DsQmLQDDB
— NAYANTHARA FC KERALA (@NayantharaFCK) October 18, 2021