பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நயன்- விக்கி தம்பதியினர்... குவியும் லைக்குகள்
நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் மற்றும் அன்பு குழந்தைகளுடன் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நயன்ராரா- விக்னேஷ் சிவன்
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார். திரைதுறையில், அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் அறியப்படுகின்றார்கள்.
நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

தாயான பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா திகழ்கின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில், நயன்தாரா குடும்பத்துடன் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |