வாழ்க்கையை உணர விரும்பினால் இதை செய்ங்க... பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம்
இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பறந்து போ திரைப்படம் குறித்து நடிகை நயன்தாரா தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பறந்து போ
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வித்தியாசமான கதைகளம் கொண்ட தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பறந்து போ.
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நயன்தாரா புகழாரம்
ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுவரும் இந்த திரைப்படம் குறித்து முன்னணி நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த பரபரப்பான உலகில், நீங்கள் உண்மையாகவே வாழ்க்கையை உணர விரும்பினால், உங்கள் குழந்தைகளை மலைகளுக்குக் கூட்டிச் செல்லுங்கள், அவர்களுடன் மலையேறுங்கள், அல்லது நீங்கள் சோர்ந்துபோகும் வரை குளத்தின் அருகே அவர்களுடன் விளையாடுங்கள்.
அல்லது எளிதாக ராம்சாரின் பறந்துபோ படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கே நாம் உண்மையாகவே எதை இழந்துவருகிறோம் என்பதைக் அறிந்துக்கொள்ளுங்கள்.
இந்தப் படம் வாழ்வில் உண்மையாகவே 'முக்கியமான விஷயம்' என்ன என்பதை அழகாக நினைவுபடுத்தியிருக்கிறது.
நான் பார்த்ததிலேயே ஒரு ஸ்வீட்டான திரைப்படம்" எனக் கூறியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம்பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |