நிர்வாண பூஜை செய்தால் போதும்... கணவன் கண்முன்னே மனைவியை சாமியார் செய்த கொடூர செயல்!
நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று போலி சாமியார் ஒருவன் பலமுறை இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் போலி சாமியார் ஒருவன் பெண்ணை நிர்வாண பூஜை செய்தால் பணம் கிடைக்கும் என கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த சம்பவத்தில் சிக்கிய சாமியார் உட்பட அவனது கூட்டாளிகள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், அதிர்ச்சியூட்டும் விதமாக இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார்.
மேலும், சாமியாரிடம் நடத்திய விசாரணையில், ஆரம்பத்தில் அந்த பெண்ணின் கணவருக்கு ஆசை வார்த்தை கூறி பின்னர் அவர் மூலம் அவரது மனைவியை அழைத்து வந்து நிர்வாணமாக சில பரிகாரங்களை செய்யும்படி கூறியுள்ளனர்.
அப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து, சாமியாரின் பேச்சைக் கேட்டு அந்த பெண்ணும் நடந்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது சம்பந்தம் உள்ளதா, வேறு பல பெண்களையும் சாமியார் சித்திரவதை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
