சிறையிலிருந்து காணொளி வெளியிட்ட காதலி.. பதறிப்போய் விசாரிக்கும் நெட்டிசன்கள்
நாஞ்சில் விஜயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் காதலி என குரல் கொடுத்து வரும் திருநங்கை வைஷுலிசா சிறையில் இருந்தபடி காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
நாஞ்சில் விஜயன்
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.
இவர், எந்த கெட் அப் கொடுத்தாலும் அதில் தன் 100 சதவீத உழைப்பை கொடுப்பது தான் நாஞ்சில் விஜயனை பிரபலமாக்கியுள்ளது. “அது இது எது” நிகழ்ச்சியில் அதிகப்படியாக லேடி கெட் அப் போட்டு வந்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பது தான் இவரின் வேலை. இதனால் தான் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில், நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின்னர் நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் சமூக வலைத்தளங்களில் தம்பதிகளாக பிரபலமாவது வழக்கமாக கொண்டிருந்தார். அவர்களின் ரீல்ஸ் காணொளியை பார்ப்பதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
சிறைக்குள் கண்ணீருடன் வைஷுலிசா
இந்த நிலையில், நாஞ்சில் விஜயனுக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்துள்ளது.
இதனை தொடர்ந்து, நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக திருநங்கை வைஷுலிசா புகார் கொடுத்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து நாஞ்சில் விஜயன் மற்றும் அவரின் மனைவி மரியா இருவரும் காணொளியொன்றை பகிர்ந்திருந்தனர்.
ஆனாலும் ஒரு முடிவு வராமல் சமூக வலைத்தளங்களில் நாஞ்சில் விஜயன்- வைஷுலிசா காதல் விவாகரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில், வைஷுலிசா பகிர்ந்த ரீல்ஸ் காணொளிகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அதில், சிறைக்குள் கண்ணீருடன் அமர்ந்து சோகப்பாடலுக்கு ரீல்ஸ் செய்கிறார். இந்த இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், “தற்போது இருக்கும் நிலையில் வைஷுலிசாக்கு இது பொருந்தும்..” என நெட்டிசன்களும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |