கணவர் நினைவாக சமந்தா குத்திய டாட்டூ: சீக்ரெட்டை வெளிப்படுத்தும் வைரல் புகைப்படம்
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த நிலையில், தற்போது அவர் முன்பு தனது உடம்பில் போட்டிருந்த டாட்டூ புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் சரியான காரணம் என்ன என்பது வெளியாகவில்லை. ஆனால் இணையத்தில் பரவிய பல வதந்திகளுக்கு சமீபத்தில் பதில் அளித்து சமந்தா முற்றுப்புள்ளி வைத்தார்.
சமந்தா தன்னுடைய காதல் கணவர் நினைவாக தன்னுடைய உடலில் 3 இடங்களில் டாட்டூ குத்தியிருந்ததும், அதற்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது என்பதை அவரே கூறியிருந்தார்.
சமந்தா முதுகில் YMC என்ற மூன்று எழுத்தினை டாட்ரூ குத்தியிருந்தார். இந்த டாட்ரூ 'Ye Maaya Chesave' என்ற படத்தினை குறிக்கின்றது. ஏனெனில் 2010ம் ஆண்டில் மேனன் இயக்கிய முதல்படமான இப்படத்தில் தனது காதல் கணவருடன் சமந்தா நடித்திருந்தார்.
இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் அவருடைய கணவர் பச்சை குத்தியுள்ளார். இவை வைக்கிங் சின்னங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த சின்னத்தின் அர்த்தம் என்பது, உங்களுக்கான சொந்த வாழ்க்கையை உருவாக்குங்கள் என்பது அர்த்தம்.
இதை தொடர்ந்து, சாய் டாட்டூ ஒன்றையும் தன்னுடைய உடம்பில் குத்தியுள்ளார். இது அவருடைய கணவரின் பெயர் என்று கூறப்படுகின்றது.
தற்போது நாகசைதன்யாவை சமந்தா பிரிந்து விட்ட நிலையில், இந்த டாட்டூக்களை நீக்குவாரா? என சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

