மாமனாரை பெயர் சொல்லி அழைத்த சமந்தா! உடனே நீக்கியது ஏன்?
தன் மாமனார் நாகர்ஜுனா போட்ட ட்வீட்டுக்கு கமெண்ட் போட்ட சமந்தா அதை நீக்கிவிட்டு மீண்டும் கமெண்ட் செய்தார்.
மறைந்த நடிகர் அகினேனி நாகேஸ்வர ராவின் பிறந்தநாளான நேற்று அவரின் மகனான நடிகர் நாகர்ஜுனா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவை பார்த்த சமந்தா, இது மிகவும் அழகாக இருக்கிறது நாகர்ஜுனா என்று கமெண்ட் செய்தார். பின்னர் அந்த கமெண்ட்டை நீக்கிவிட்டார்.
புது கமெண்ட்டில் நாகர்ஜுனா மாமா என்று குறிப்பிட்டார் சமந்தா. அவருக்கும், காதல் கணவரான நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சாக உள்ளது. இந்நிலையில் நாகர்ஜுனாவை மாமா என்று சொல்லாமல் சும்மா கமெண்ட் போட்டதை பார்த்தவர்கள் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.
முன்னதாக நாகர்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தி சமந்தா ட்வீட் செய்தார். ஆனால் நாகர்ஜுனா பதில் அளிக்கவில்லை.