விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் திரையில் இணையும் சமந்தா - நாக சைதன்யா! குஷியில் ரசிகர்கள்
நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக தோற்றவுள்ள தகவல் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சமந்தா - நாகா சைதன்யா
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
தனது முன்னாள் கணவர் நினைவாக தனது முதுகில் குத்தியிருந்த YMC என்கிற டாட்டூவை நீக்கியுள்ளார். நாக சைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்த முதல் படம் 'யே மாய சேசாவே' இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்ததால், அப்படத்தின் நினைவாக YMC என்கிற டாட்டூவை தனது முதுகில் குத்தியிருந்தார் சமந்தா.
ஆனால், விவாகரத்ததாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் அந்த டாட்டூவையும் உடலில் இருந்து நீக்கிவிட்டு அந்த காணொளியை பதிவிட்டு Nothing to Hide என் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ரீ-ரிலீஸ் ஆகும் விடிவி தெலுங்கு வெர்ஷன் 'யே மாய சேசாவே' மறுவெளியீட்டு அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து பெற்ற பின்னர் எந்த மேடையையும் பகிர்ந்துக்கொள்ளாத நாக சைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக மீண்டும் ஒன்றாகத் தோன்றுவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
