இரவில் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் தெய்வங்கள்: யாரும் அறிந்திடாத பகீர் உண்மைகள்
பீகார் மாநிலம் பஸ்தாரில் உள்ள கோவிலில் இரவில் யாரும் இல்லாத தருணத்தில் பேசும் சத்தம் கேட்பது நிபுணர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகாரில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி திரிபுரா சுந்தரி தேவியின் கோயிலில் இவ்வாறான மர்மமான சம்பவம் நடைபெறுகின்றது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பவானி மிஸ்ரா என்ற தாந்த்ரீகர் திரிபுரசுந்தரி தேவியின் சன்னதியையும் பிற தேவிகளின் சன்னதியையும் கட்ட இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
வேத மற்றும் தாந்திரீக நடைமுறைகளை பயன்படுத்தி தெய்வங்களை வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இக்கோவிலில் முதன்மை தெய்வம் லலிதா திரிபுரசுந்தரி என்றாலும் காளி, தாரா, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, மாதங்கி மற்றும் கமலா படங்களும், பைரவர், தத்தாத்திரேயர் என பிற தெய்வங்களும் இருக்கின்றது.
அடைக்கப்பட்ட கோவிலுக்குள் இவ்வாறான சத்தம் அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களுக்கு கேட்பதால் தெய்வங்கள் இரவில் பேசிக்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இக்கோவிலுக்குள் இரவு நேரங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தெய்வங்கள் ஒருவருக்கு ஒருவர் உரையாடுவது போல கோயில் சுவர்கள் வழியாக சத்தம் வருவதை பலர் கேட்டிருக்கிறார்கள். இதனை அறிந்த விஞ்ஞானிகளும் இரவில் கோவிலுக்கு சென்று கவனித்த போது, வார்த்தைகள் கோவில் சுவர்களுக்குள் எதிரொலிக்கின்றன என்று முடிவு செய்தனர்.
ஆனாலும் குறித்த சத்தம் வெளியிலிருந்து வரவில்லை என்றும் கோவிலுக்குள் தான் இவ்வாறு வார்த்தை எதிரொலிக்கின்றது... இது எதனால் என்பது தெரியவில்லை.
இந்த மர்மமான நிகழ்வு பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், குறித்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகையும் அதிகரித்து வருகின்றது.