உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய நபர்! மனதை பதை பதைக்க வைக்கும் திக்திக் நிமிடங்கள்
விபத்துகள் என்பது உலகில் பொதுவான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஆனால் கண் முன்னே நடக்கும் விபத்துகள் மோசமானவை.
மும்பையில் ரயில் நிலையத்தில் நடக்கவிருந்த விபத்தில் குழந்தையை ஒரு ரயில்வே ஊழியர் காப்பாற்றியுள்ளார்.
மும்பை ரயில்வே நிலையத்தில் ஒரு பெண் மற்றும் அவரது 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க குழந்தை உடன் ரயில்வே நிலையத்திற்கு வருகிறார்.
Hats off to this Railway staff Mr. Mayur Shelke, Railwayman at Vangani Railway Station,Mumbai who risked his life to save the child's life.🙏👮👮🙏#TirupurTalks pic.twitter.com/qS9n9FcmhJ
— Tirupur Talks (@TirupurTalks) April 19, 2021
அப்போது ரயில் வருகிறதா என அவர் பார்க்கும்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக அந்த குழந்தையானது நடை மேடையில் இருந்து தவறுதலாக தண்டவாளத்தில் விழுகிறது. அச்சமயம் பார்த்து ரயிலோ மிக அருகில் வந்து விட்டது.
இதை பார்த்த அந்த பெண்மணி பயந்து அந்த குழந்தையை சீக்கிரம் மேலே ஏறி வரும்படி சைகை செய்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்வை பார்த்த ரயில்வே ஊழியரான மாயூர் ஷெல்கே அதி வேகத்தில் தண்டவாளத்தில் ஓடி வருகிறார்.
அவர் ஓடி வரும் அதே சமயம் அவருக்கு எதிரில் ரயிலும் வேகமாக அருகே வந்துக்கொண்டிருப்பதை வீடியோவில் காண இயல்கிறது.
அவர் முழு வேகத்தில் வந்து குழந்தையை எடுத்து நடைமேடையில் வீசிவிட்டு, அவரும் நடை மேடைக்கு தாவி விடுகிறார். இந்த திக்திக் நிமிடங்கள் வைரலாகி வருவதுடன் உயிரை காப்பாற்றிய நபருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.