‘மௌனம் பேசியதே’ நடிகர் அஞ்சுக்கு என்னாச்சு? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
‘மௌனம் பேசியதே’ படத்தில் நடித்த அஞ்சு மகேந்திரனின் தற்போதைய நிலை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அஞ்சு மகேந்திரன்
கடந்த கடந்த 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, போன்றவர்களின் நடிப்பில் வெளியான படம் தான் ‘மௌனம் பேசியதே’. இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்.
சூர்யா மற்றும் திரிஷாவின் நடிப்பை இந்த படத்தில் அனைவரும் ரசித்தனர். இது மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

என்ன தான் இந்த படத்தில் சூர்யா த்ரிஷா நடிப்பு மக்களை கவர்ந்திருந்தாலும் சூர்யாவின் நண்பனாக நடித்த அஞ்சு மகேந்திரனின் கதாபாத்திரம் அவர்களை அதிகம் கவர்ந்தது.
இவர் சேது மற்றும் ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் மொளனம் பேசியதே படம் தான் இவருக்கு அதிகமான ஹிட் கொடுத்தது.
இறுதியாக கன்னட படத்தில் நடித்ததுடன் இவரை சினிமாவில் காண முடியவில்லை. தற்போது மௌனம் பேசியதே திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ரசிகர்கள் அஞ்சு வாரியனுக்கு என்னாச்சு என சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்காக தற்போது அஞ்சு மகேந்திரன் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இவரை பற்றி நடிகர் நந்தா கூறி உள்ளார். " அஞ்சு மகேந்திரன் இப்போது டான்ஸ் மாஸ்டர்.
நீண்ட வருடங்களாக அவருடன் நான் தொடர்பில் இல்லை" என்று நந்தா கூறியிருக்கிறார். "படத்தில் அவருடையது நல்ல கேரக்டர். பயங்கர காமெடி சென்ஸ் உள்ள மனிதன் அவர். செட்டில் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.

ஷாட் வந்துவிட்டால் பயங்கரமாக பதற்றப்படுவார். கையெல்லாம் வேர்த்துவிடும்.
அதேநேரம் கட் சொல்லிவிட்டால் மீண்டும் நார்மலாகிவிடுவார்" இதன்படி தற்போது அஞ்சு மனேந்திரன் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார் என கூறி இருந்தாலும் அது உறுதியாக சொல்வதற்கு எந்த தகவலும் இல்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |