வைர மூக்குத்தி பரிசு.. மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- நயன்தாராவின் ரியாக்ஷன்
மூக்குத்தி அம்மன் 2 பட பூஜைக்கு வந்த ஒரு சில பெண்க்கு வைர மூக்குத்தி பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. அத்துடன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்திருப்பார்.
சாமி படம் போன்று எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி ஆகியோரும் இணைந்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்கள் இன்றைய தினம் நடந்து முடிந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. முதல் ஷாட்டாக நடிகை நயன்தாரா, அம்மனை வணங்குவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
வைர மூக்குத்தி பரிசு
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட பூஜைக்கு வந்த தொகுப்பாளினி டிடி நீலகண்டன், பாடகி அருணா உள்ளிட்ட சில பெண் பிரபலங்களுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வைர மூக்குத்தியை பரிசாக கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த கோலிவுட் பிரபலங்களே ஆடிப்போய் விட்டனர். “படத்தின் பட பூஜைக்கே மூக்குத்தியை பரிசாக கொடுக்கிறாரே..” என தொகுப்பாளினி டிடி நீலகண்டனும் ஐசரி கணேஷை பாராட்டி பேசினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |


