எனக்குன்னே வருவீங்களாடா.. மேஜிக் செய்து குரங்கை அலறவிட்ட நபர்! வைரல் வீடியோ
வளர்ந்து வரும் டிஜிட்டல் நவீன உலகில் அன்றாட சமூக வலைத்தளங்களி பல வீடியோக்கள் வெளியாகி வைரலாவது உண்டு. அவைகளில், காமெடி வீடியோ, சேட்டை வீடியோ, சமையல் வீடியோ, ட்ராவல் வீடியோ போன்றவை அதிகம் வைரலாகும்.
அந்த வகையில், வேடிக்கையான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. Maximiliano Ibarra என்கிற டிக் டாக் யூசர் பதிவிட்ட வீடியோவை தான் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு இதுவரை யாரும் பதிவேற்றாத ஒன்றை இவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், மெக்சிகோவில் உள்ள சாபுல்டெபெக் மிருகக்காட்சி சாலைக்கு செல்லும் போது, மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒரு குரங்கின் முன் ஒரு எளிய மாய வித்தையைச் செய்ய இவர் முடிவு செய்தார்.
ஆனால், அந்த குரங்கு அவர் எதிர் பார்த்ததை விடவும் ஒரு செயலை செய்து காட்டியது. குரங்கு மற்றும் இவர் செய்த வேடிக்கையான செயல்கள் கமெராவில் பதிவானது.
இந்த வீடியோ தான் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், விடியோவில் இபார்ரா அவரது வலது கையில் ஒரு இலையை வைத்து சூப்பர் மேஜிக்கை செய்து காட்டியுள்ளார். ஆரம்பத்தில் தனது கையில் இலையை வைத்து அதை மறைய வைப்பது போன்று அந்த குரங்கிடம் செய்து காட்டினார்.
இதனைக்கண்ட அந்த குரங்கு அருமையாக ரியாக்ஷன் செய்தது. இது பார்ப்பதற்கு, "எப்படி இதை நீங்கள் மறைய வைத்தீர்கள்" என்பது போன்று இருந்தது. இந்த முக பாவனையை குரங்கு மிக அழகாக கொடுத்திருந்தது.
பின்னர் அவர் செய்த மேஜிக்கை கண்டு குரங்கு அங்கும் இங்கும் தாவி ஏண்டா நோக அடிக்கிறீங்க என்பது போல் ரியாக்ஷன் கொடுத்து விட்டு ஓடிச்சென்றது.