திருமணத்தில் மணமகள் மீது மழையாக பொழிந்த பணம் - விளாசிய நெட்டிசன்கள்
பஞ்சாபில் நடந்த திருமண விழாவில் மணமகள் மீது லட்டசக்கணக்கில் பணம் பொழியப்பட்டது. இது தொடர்பில் வெளியான வீடியோ இணையத்தில் அதிக விமர்சனத்தை பெற்றது.
வைரல் காணொளி
பஞ்சாபில் நடந்த திருமண நிகழ்வில் மணப்பெண் மீது லட்சக்கணக்கில் பணம் தூவப்பட்டது. இந்த காணொளி பொதுமக்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை வாங்கியது.
பஞ்சாபின் டர்ண் டரன் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற இடத்தில் பிப் 14ம் திகதி காதலர் தினத்தன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் இநத சம்பவம் நடந்துள்ளது.

இப்படி நடக்க காரணம் திருமணத்தில் பஞ்சாபி கலாசாரப்படி, மணமக்களை வாழ்த்தி பணத்தை காற்றில் வீசி எறியும் ஒரு சடங்காகவே இது உள்ளது.
இந்த காணொளியில் மணமகள் மீது சுமார் எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய்த் தாள்கள் வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பல விமர்சனங்களும் வந்தது.

இந்த விமர்சனங்களுக்கு மாப்பிளையின் சகோதரர் விளக்கமளித்தார். திருமணமத்தின்போது மணமகள் மீது வெீசப்பட்ட பணம் உட்டரை கோடி இல்லை வெறும் 2முதல் 4லட்சம் மட்டுமே என கூறினார்.
பஞ்சாபி திருமணங்களில் இதுபோல இவர்கள் சடங்கு செய்ய காரணம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தீய சக்திகளை விரட்டவும் என கூறப்படுகின்றது. இதனால் இந்த சடங்கை அவர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |