இந்த நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்தாதீங்க! பாரிய பிரச்சினை ஏற்படுமாம்
இன்றைய நவீன உலகில் செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அதேபோன்று, செல்போன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது.
அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன், மனிதர்களின் உயிர் நாடியாக செல்போன் இருந்து வருகிறது.
பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துவது சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

சிக்னல் இல்லாத நேரத்தில் உபயோகிக்க வேண்டாம்
குறிப்பாக phone Signal பலவீனமா இருக்கும் போது, உங்கள் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், உங்கள் செல்போனை அருகில் வைத்து பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை மெசேஜ் டைப் செய்து தகவலை பரிமாறிக் கொள்ளவும்.
ஏனெனில், அதிலிருந்து வெளிவரும் R&F Transmissions ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும்.
அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றை பாதிக்கும். அதுமட்டுமின்று, ஒருவித மன அழுத்தமும் உண்டாகும்.
எனவே, phone Signal பலவீனமா இருக்கும் போது, செல்போன் உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

துரத்தில் வைத்து பார்ப்பது அவசியம்
உடலோடு ஒட்டி இருக்கும் உங்களது செல்போன் வெளியிடும் கதிர்வீச்சுகளால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, செல்போனை உடலோடு ஒட்டி வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இது பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்று வரை இது நிரூபிக்கப்படவில்லை.
எனவே, செல்போன் பயன்படுத்தும் போது 10, 20 செ. மீ தொலைவில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
முடிந்த வரை கண்களுக்கு மிக அருகில் வைத்து, மொபைல்போனைப் பார்க்காமல் இருப்பது நல்லது.20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக்கொள்வது சிறந்தது.