காணாமல் போன கணவர்... போனுக்கு 2 ஆண்டுகளுக்கு பின்பு வந்த மெசேஜ்! அண்ணியின் கொடூரம் அம்பலம்
சொத்துக்காக மைத்துனரைக் கொலை செய்த அண்ணி, இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு செல்போன் மெசேஜ் மூலம் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், ஜெம் நகரில் வசித்து வந்தவர் கொஞ்சி அடைக்கான் (40). இவரது மனைவி பழனியம்மாள் (34). இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னையன்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சி அடைக்கான் வீடு திரும்பவில்லை என்பதால் மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
புகாரை விசாரித்த பொலிசார் எந்த தகவலும் இல்லாததால் புகாரை கிடப்பில் போட்டுள்ளனர். .இந்நிலையில் கொஞ்சியின் மனைவி அவரது சிம் கார்டை தனது மொபைலில் சமீபத்தில் போட்டுள்ளார். அதில் கொஞ்சியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 3.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்த நிலையில், மனைவி பழனியம்மாள் பொலிஸ் உயர்அதிகாரி ஒருவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கொஞ்சி அடைக்கான். கடந்த 2009ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துள்ள வந்த நிலையில், அங்கு வீடும் கட்டியுள்ளார். பின்பு அவர், தனது பெரியம்மா மகனையும், அவரது மனைவி சித்ரா, மற்றும் 2 மகள்கள், ஒரு மகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்ததோடு, அண்ணனுக்கு வேலை இல்லாததால் ரூபாய் 3 லட்சம் கொடுத்து கார் வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் அண்ணிக்கும், கொஞ்சிக்கும் தவறான பழக்கமும் இருந்துள்ளது. இதனை அறிந்த சித்ராவின் கணவர் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்ட நிலையில், சித்ராவும், கொஞ்சியும் தான் கட்டிய வீட்டில் வசித்துள்ளனர். பின்பு 2015ம் ஆண்டு பழனியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துவிட்டு, தான் கட்டிய வீட்டிற்கு வந்த போது, சித்ரா சண்டையிட்டு, திருமணம் செய்துவிட்டு இங்கு தங்கக்கூடாது என்று தகராறு செய்ததால், காஞ்சிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கியுள்ளதுடன், இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்துள்ளது.
இந்த வேளையில் சுபத்திரா நகரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்ய கொஞ்சி அடைக்கான் முயற்சி செய்ததோடு, ஐந்து லட்சம் முன்பணமும் நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார். இதையறிந்த சித்ரா, கொஞ்சி அடைக்கானை கொலை செய்துவிட்டால் இந்த வீடு நமக்கு சொந்தமாகிவிடும் என முடிவு செய்து, மகளின் காதலன் ஏழுமலை, மற்றும் தனது மகன், கூலிப்படை தலைவர் ஒருவரை வைத்து கொஞ்சியைக் கொலை செய்து இரும்பு பேரலில் அடைத்து ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய கிணற்றில் வீசி சென்றுள்ளார்.
கொஞ்சியின் கொலைக்கு காரணமானவரை பொலிசார் தேடி வருவதோடு, மலைப்பட்டு பகுதியில் உள்ள கிணற்றின் தண்ணீரை இரைத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக எலும்பு கூடுகளை சேகரித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான சித்ராவின் வழக்கறிஞர், அவரது கள்ளக்காதலன் உட்பட 8 பேரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.