2025 உலக அழகி ஓபல் சுச்சாட்டா மொத்தமாக பெற்ற வெற்றி பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
நேற்று மாலை இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் தாய்லாந்து அழகி உலக அழகி பட்டத்தை வென்றார்.
2025 இன் உலக அழகி
நேற்று மாலை இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.8.5 கோடி பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது (1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்). உலக அழகி பட்டத்தை வென்ற ஓபல் சுச்சாட்டாவுக்கு கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூட்டி பாராட்டினார். (1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
இவரது ஆடை அனைவரையும் ஈர்க்கும் வகையில் "Opal For Her" என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
அவருடன் முதல் நான்கு கண்ட விருதுகளில் மிஸ் மார்டினிக் - ஆரேலி ஜோச்சிம் (கரீபியன்), மிஸ் எத்தியோப்பியா - ஹாசெட் டெரெஜ் அட்மாசு (ஆப்பிரிக்கா), மற்றும் மிஸ் போலந்து - மாஜா கிளாஜ்டா (ஐரோப்பா) ஆகியோர் இணைந்தனர்.
இந்த நான்கு பேரும் முதல் 20 மற்றும் முதல் 8 சுற்றுகளில் முன்னேறி இறுதிப் போட்டியாளர்களில் தங்கள் இடங்களைப் பிடித்தனர். சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் தற்போதைய மிஸ் வேர்ல்ட் இலங்கை அழகி அனுதி குணசேகரா.
திருமதி குணசேகரா, விளையாட்டு சவால், திறமை சவால், நேரடி சவால், சிறந்த மாடல் போட்டி, மல்டிமீடியா சவால் மற்றும் அழகு நோக்கத்துடன் கூடிய பிரிவு உள்ளிட்ட பல விரைவான நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஓபல் சுச்சாட்டா 2003ஆம் ஆண்டு பிறந்தவர்.
தாய், சைனீஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் உரையாட திறமை உள்ளது. 16 வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சையை எடுத்து கொண்டவர்.
இதன்பின் மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வந்துள்ளார். உலக அழகி பட்டத்தை வெல்வதற்கான பயணத்தை 2021ஆம் ஆண்டிலேயே தொடங்கி தற்போது வெற்றியும் அடைந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |