புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
ஜோதிட ரீதியில் கிரங்களின் நிலையானது 12 ராசிகளிலும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருப்பதால், கிரக பெயர்ச்சிகளுக்கும், கிரக சேர்க்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அந்தவகையில், தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் கிரகங்களின் இளவரசனான புதன் பகவான் ஏப்ரல் 11 ஆம் திகதி மீன ராசிக்குள் செல்லவுள்ளார்.மீனம் புதன் நீச்சமடையும் ராசி என்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதக விளைவை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த ராசியின் அதிபதியான குரு பகவான் கேந்திர வீட்டில் இருப்பதால், புதன் மற்றும் குரு இணைப்பு நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது.அதனால் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

குரு புதன் இணைவால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் ரிஷப ராசியினரின் பொருளாதார நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.
பல வழிகளிலும் வருமானத்தை பெருக்கிக்கொள்வதற்கு தேவையான முயற்ச்சிகளை எடுப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தானாக அமையும். குருவின் அருளால் தங்கம் வாங்கும் வாயப்பு அமையும்.
முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வகையில், பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும். ஏப்ரல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பணப்புலக்கம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மிதுனம்

புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோனமானது மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோக நன்மைகளை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டாகும்.
தொழில் விடயத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்ட யோகம் காணப்படுகின்றது. அலுவவக வேலைகளுக்கும் புதிய திட்டங்களுக்கும் குடும்பத்தில் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும்.
மீனம்

புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் மீன ராசியினருக்கு இதுவரையில் இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும்.
புதிய வழியில் பெரியளவில் வருமானம் கிடைப்பதற்கான யோகம் கூடிவரும். புதன் அருளால் சிந்தனையில் தெளிவு பிறக்கும். அறிவாற்றல் அதிகரிக்கும்.
இதுவரை காலமும் இழுபறியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதம் முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |