சிறையிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் காட்சி
நடிகை மீரா மிதுன் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியேறிய போது எடுக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேவலமாக திட்டியதுடன், திரைப்பட துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து தலைமைறைவாக இருந்த மீராவின் ஆண் நண்பர் ஷாம் கைது செய்யப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 35 நாட்களுக்கு மேலாக சிறையிலிருந்த இவருக்கும், இவரது நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.
சிறையை விட்டு மீரா மிதுன் வெளியே வரும் வீடியோ காட்சியும் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.