வாடிய முகத்துடன் மீனா! மறைந்த கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகில் பரிதாபமாய் இருக்கும் சோகம்
நடிகை மீனா அவரின் வீட்டில் தனது மறைந்த கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
சுமார் 13 ஆண்டுகளாக மீனாவை வித்யாசாகர் தனது கண்ணுக்குள் வைத்து பார்த்தார்.
மீனாவின் குடும்பத்தினருக்கு அண்மையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அந்த தொற்றிலிருந்து மீண்டாலும் வித்யாசாகருக்கு மட்டும் அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது.
இந்த பாதிப்பு மிகவும் தீவிரமடைந்ததால் அவர் சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இங்கு 95 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். வித்யாசாகரின் இறப்பு மீனாவுக்கும் அவரது மகளுக்கும் பேரிழப்பு.
இந்த நிலையில் நடிகை மீனா மறைந்த கணவர் வித்யாசாகரின் அருகில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.