மீனா வீட்டில் 14 நாளில் நடக்கவிருந்த கொண்டாட்டம்! அதற்குள் கணவர் இறந்த சோகம்
நடிகை மீனா தனது கணவருடன் இன்னும் 14 நாளில் திருமண நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனா
பிரபல நடிகையாக வலம்வந்த மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து பெங்களூரில் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
14 நாளில் நடக்கவிருந்த கொண்டாட்டம்
இந்நிலையில் இன்னும் 14 நாட்களில், தங்களின் 13 வது ஆண்டு திருமண நாளை மீனா மற்றும் வித்யாசாகர் ஆகியோர் கொண்டாட இருந்த நிலையில், கணவர் வித்யாசாகர் மரணமடைந்த சம்பவம், பலரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.