எரியும் பிணத்தை சாப்பிடும் வினோத திருவிழா - எதற்கு, எங்கு தெரியுமா?
திருச்சியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பூக்குளம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மயானக் கொள்ளை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எரியும் பிணத்தை சாப்பிடும் திருவிழா
திருச்சி மாநகரின் மையப் பகுதியான பெரிய கடை வீதியில் அமைந்துள்ளது பூக்குளம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக பார்க்கப்படுகின்றது.
இந்த கோவிலில் வழிபட்டு வரும் பக்தர்களுக்கு என்ன வரமாக இருந்தாலும் நிறைவேறும் என்று சொல்லப்படுகின்றது. இங்கே தான் மகா சிவராத்திரி திருவிழா மிக விசேடமாக கொண்டாடப்படும்.

மொத்தம் பத்து நாட்கள் விழாவாக இங்கு சிவராத்ரி விழா கொண்டாடப்படும். இந்த கோவிலில் சிவராத்ரி விழாவில் கொண்டாடப்படும் மயானக்கொள்ளை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் விதமாக, அன்னை அங்காளம்மன் விஸ்வரூபம் எடுத்து மயானத்தில் ஆடிய ஆட்டம் தான் மயானக் கொள்ளை விழாவாக கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளில் இந்த திருவிழா நடைபெறும். இங்கு ‘கொள்ளை’ என்பது பக்தர்களின் கர்ம வினைகள் மற்றும் தீய சக்திகளை அழித்து, அவர்களுக்கு நல்வாழ்வை அள்ளித் தருவதாகக் குறிக்கிறது.

எரியும் பிணத்தை உண்ணுதல்
இந்த கோவில் மயானக்கொள்ளை எனப்படும் திருவிழா செய்ய பெரிய கடைவீதி, என்.எஸ்.பி ரோடு, நந்தி கோயில் தெரு, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வழியாக ஓயாமரி சுடுகாட்டை நோக்கி புறப்படவார்கள்.
அடைந்ந பின்னர் அங்கு இருக்கும் அரிச்சந்திர மகாராஜா மற்றும் பைரவர் ஆகியோருக்கு பூஜைகள் நடைபெறும். இதன்பி ன்னர் சிறப்பான தீப ஆராதனைகள் நடைபெறும்.

பின்னர் மருளாளி எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிடுவார். இதன் பின்னர் அடுக்கி வைத்திருக்கும் மனித எலும்புகளை பகதர்களுக்கு பிரசாதமாக மிருனாளி வழங்கவார்.
இதனுடன் சாப்பலும் வழங்கப்படும். இந்த திருவிழாவின் நம்பிக்கை து தீராத நோய்களையும் தீர்க்கும் என்பதும், செல்வம் பெருகும் என்பதும் ஆகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |