நாட்டாமை படத்தில் நடித்த இந்த சிறுவன் தற்போது எப்படியிருக்கிறார்? இவர் படைத்த உலக சாதனை என்ன தெரியுமா?
'நாட்டாமை' படம் என்றதுமே சட்டென நினைவுக்கு வருபவர் மாஸ்டர் மகேந்திரன், அப்படத்தில் அவர் பேசிய வசனம் இன்று வரை பாப்புலரான ஒன்று.
குழந்தை நட்சத்திரமாக, சுறுசுறுப்பான நடிப்பால், பக்கத்து வீட்டு சிறுவனின் நினைவை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
தமிழ், மலையாளம் என 6 மொழிகளில், குழந்தை நட்சத்திரமாக 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், உலகளவில் இவர் படைத்த இச்சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
விழா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும், இவருக்கு நல்ல பெயரை எடுத்துக் கொடுத்தது என்றால் அது மாஸ்டர் தான்.
மாஸ்டரில் இவரது சீன்களுக்கு ரசிகர்களின் கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது, இதற்கு பின்னர் புதிதாக காரை வாங்கிய மகேந்திரன், நூற்றுக்குமேல் படங்களில் நடித்திருந்தாலும், நடிகனாக என்னை அடையாளம் காட்டியதும், அங்கீகாரம் தந்ததும் மாஸ்டர் திரைப்படம்தான்.
அதனால், நான் வாங்கும் காரை மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்குவது என்று முடிவு செய்தேன்" என பதிவிட்டு அவர் கையால் சாவியையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.