முக கவசம் அணியாமல் வந்த பிரதமர்... அதிரடியாக அபராதம் விதித்த கவர்னர்
ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம், தலைநகர் பாங்காக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா, முக கவசம் அணியவில்லை.விதிமீறலில் ஈடுபட்ட பிரதமருக்கு, பாங்காக் மாகாண கவர்னர் அஸ்வின் குவான் முவாங், நேற்று 190 டாலர்கள் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
சிட்டி ஹாலில் பிரதமர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விசாரித்திருக்கிறார், அதில் வீட்டை விட்டு வெளியே வந்தா முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரிந்திருந்தும் பிரதமர் முகக்கவசம் அணியாமல் வந்தார், இதனால் பிரதமராக இருந்தாலும் குற்றம் குற்றமே, அதனால் அபராதம் விதிக்கப்பட்டது என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், திங்கள் முதல் பேங்காக்கில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை எனில் மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் பிரதமரே விதிமீறலில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் அந்நாட்டு குடிமக்கள் கடும் விமர்சனங்களில் இறங்கினர், முகக்கவசம் அணியாத பிரதமரின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர். இதனையடுத்தே கவர்னர் அதிரடி அபராதம் விதித்துள்ளார்.
