மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி :செப்டம்பர் 18 முதல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள்!
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சலின் காரணியாவார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான இவர், சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுகிறார்.இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும்.

தற்போது ரிஷப ராசியில் பயணிக்கும் செவ்வாய், அதன் அதிபதியான சுக்கிரனின் ராசியில் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
மிதுனத்தின் அதிபதி புதன் என்பதால், இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களிடமும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக, சில ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மற்றும் நற்பலன்களைப் பெறவுள்ளனர்.
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்தப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக புதிய வேலை தொடங்க நினைத்திருந்தால், இக்காலம் ஏற்றதாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல நிவாரணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் தகவல் தொடர்புத் திறனும் அதிகரிக்கும். இதனால் முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கடகம்

கடக ராசியின் 12-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, முக்கிய பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கன்னி

கன்னி ராசியின் 10-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் செப்டம்பர் மாதம் வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தொடும் காலமாக அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நட்புகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும்.
கூட்டு தொழில் செய்பவர்களும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை மாற்றம் குறித்து நினைப்பவர்களுக்கு செப்டம்பரில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணமும் கைக்கு வந்து சேரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |