திருமணமான 2 நாளில் எஸ்கேப் ஆன புதுப்பெண்! மாப்பிள்ளையில் பலே ஐடியா
திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் மணமகனின் மாஸ்டர் பிளான் காரணமாக போலி மணமகள் மற்றும் அவருடைய கூட்டணியினர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான 2 நாளில் எஸ்கேப்
மதுரையை அடுத்த தனபால்(35) என்பவர், சந்தியா என்ற பெண் தரகர் மூலம் பெண் பார்த்து திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு மணப்பெண் சார்பாக மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் திருமணம் நடந்து இரண்டு நாள் முடிந்த நிலையில் திடீரென சந்தியா எஸ்கேப் ஆகி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தனபால் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது பணம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்தார்.
மாப்பிள்ளை போட்ட மாஸ்டர் பிளான்
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு நபரிடம் சந்திராவின் புகைப்படத்தை தரகர் கொடுத்ததை தனபால் கேள்விப்பட்டார். இதனை அடுத்து அந்த நபரிடம் பேசி அந்த கும்பலை வரவழைக்க சந்திரா மாஸ்டர் பிளான் போட்டார்.
தரகரிடம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தொலைபேசியில் பேச வைத்து திருமண நாளையும் குறித்தார். திட்டமிட்டபடி அதிகாலை 6 மணிக்கு திருமணம் செய்ய சந்தியா, தரகர் உள்பட மூன்றுபேர் வந்த நிலையில் மறைந்திருந்த தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சந்தியாவையும் அவருடன் வந்தவர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.