கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
கறிவேப்பிலை உணவிற்கு ஒரு நல்ல மணத்தை, சுவையும் தரக்கூடியது. நம்மில் பலர் இந்த கறிவேப்பிலை தூக்கி எறிந்துவிட்டே உணவை உண்ணுகின்றோம்.
இந்த கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள சத்துக்களால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
அதுவும் இந்த கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் நீரை தினமும் காலையில் குடித்து வரும் போது, உடலினுள் ஏராளமான மாற்றங்களைக் காண முடியும். அவ்வாறு உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.
எடை இழப்புக்கு உதவும்
தற்போது உடல் எடையைப் பராமரிப்பது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. ஆனால் கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால், எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது.
செரிமான மண்டலம் வலுவடையும்
தற்போது அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரியும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை சட்டென்று உயர்வதைத் தடுக்கும்.
சருமம் மற்றும் முடிக்கு நல்லது
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த கறிவேப்பிலையின் நீரை குடித்து வந்தால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, அதன் மூலம் இதய நோயின் அபாயம் குறையும். இது தவிர, இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |