சோழர் காலத்து மண்ணித்தலைச் சிவன் ஆலயம்... தற்போதைய நிலை!
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மண்ணித்தலை சிவன் கோவில் மிகவும் தொன்மையாக வரலாற்றுச் எச்சமாக அறியப்படுகின்றது.
ஆனால் இது தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு இச்சிவாலயம் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது.
ஆனாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் மேலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதமும், யுத்தத்தின் பாதிப்புகளும் இச்சிவாலயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது இச்சிவாலயம் வெடிப்புகளும், இடிபாடுகளும் நிறைந்து தோன்றுவதுடன், முகப்புத் தோற்றம் இடிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது.இவ்வாலயம் கிட்டத்தட்ட 24 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டது. ஆனாலும் இப்போது 3 அடி நீளமான சுவர்ப் பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது.
இக்கோவில் கட்டடமானது கடலில் இருந்து எடுக்கப்பட்ட கோறைக் கற்களையும், செங்கட்டிகளையும், சுதை, சுண்ணாம்பு போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆலயத்தின் வரலாற்று சிறப்புகள் மற்றும் தற்போதைய நிலை குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.