வீட்டில் மாங்காயும் தயிரும் இருக்கா? அப்போ இந்த அரைச்சு கலக்கிய செய்து பாருங்க
வீட்டில் எதுவும் சாப்பிட இல்லாத சமயத்தில் தயிர் மற்றும் மாங்காய் இருந்தால் மிகவும் சுவையான ரெசிபி செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபி பார்ப்பதற்கு அப்படியே சட்னி போல இருக்கும்.
ஆனால் இதன் பெயர் அரைச்சு கலக்கி."அரைச்சு கலக்கி" என்பது கேரளாவில் ஒரு பிரபலமான உணவு ஆகும்.
இது மாங்காய், தயிர் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை அரைத்து கலக்கி செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய்
- தேங்காய் துருவல்
- வெல்லம்
- உப்பு
- பச்சை மிளகாய்
- வர மிளகாய்
- சீரகம்
- கறிவேப்பிலை
அரைச்சு கலக்கி செய்முறை
முதலில் ஒரு கையளவு பச்ச மிகளாய் எடுத்துக்கொள்ளுங்கள். இதை அப்படியே சாதாரண நீர் கொண்டு இரண்டு மூன்று முறை அலசி கழுவ வேண்டும்.
அதன் பிறகு மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கால் கப் அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக்கொள்ளவும்.
மாங்காய் அரைச்சு கலக்கி செய்வதற்கு ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு வர மிளகாய், ஐந்து பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, சிறியளவு வெல்லம் (15-10 கிராம் ) எடுத்துக்கொள்ளவும்.
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். இது தேங்காய் சட்னி போல தான் இருக்கும். ஆனால் இது தேங்காய் சட்னி இல்லை.
இதன் மற்றொரு பெயர் மாங்காய் சட்னி எனவும் சொல்லலாம். இதை அரைத்து முடித்தவுடன் கொஞ்சம் புளித்த தயிர் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
இறுதியாக தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு வர மிளகாயை இரண்டாக உடைத்து வறுக்கவும்.
இதை அரைத்து கலக்கிய மாங்காய் தயிர் கலவையில் சேர்த்தால் மாங்காய் அரைச்சு கலக்கி ரெடி. கேரளாவில் மாங்காய் அரைச்சு கலக்கியை சாதத்தில் ஊற்றி அப்பளம் வைத்து சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை நீங்களும் செய்து மகிழுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |