26 வருடமாக தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்! பிணமாக மீட்கப்பட்ட அவலம்
அமேசான் காட்டில் கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த ஒரு பழங்குடி இனத்தை சார்ந்த நபர் தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 1970 களில், இந்த பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொடர்ந்து சிலர் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக, அந்த இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் படுகொலை செய்யப்பட்டதாகவும் மீதமிருந்த ஆறு பேர், 1995 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எப்படியே தப்பி மனிதர்கள் தாக்குதல் நடத்தி வந்ததால் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல், யாரையும் நெருங்க விடாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், யாராவது நெருங்கும் பட்சத்தில், சில ஆயுதங்கள் கொண்டு தன்னை தற்காத்து இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
26 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்
இதன் பின்னர், கடந்த 26 ஆண்டுகளாக தனியாக இருந்து வரும் நபர், தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறிய குடிசை வீடு ஒன்றில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் தேசிய இந்திய அறக்கட்டளையான FUNAI, குறிப்பிட்ட பழங்குடி இனத்தின் கடைசி மனிதன் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது.

இயற்கை காரணங்களால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அரசாங்கம் நியமித்த குழு ஒன்று இவரை எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
