சாலையில் படுத்திருந்த ராட்சத பாம்பு! அசால்ட்டாக வந்த நபர் செய்த தரமான சம்பவம்
இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சாலையில் படுத்திருந்த பாம்பு
வீடியோவில், நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி, சாலைக்கு நடுவே கிடக்கும் பாம்பை நோக்கி செல்கிறார். மேலும், அதன் அருகே சென்று பாம்பின் வாலை பிடித்த அந்த நபர், அதனை காட்டை நோக்கி நகர்த்தி போடுகிறார். உடனடியாக, அந்த பாம்பும் அங்கிருந்து வேகமாக ஊர்ந்து காட்டுக்குள் செல்கிறது.
முன்னதாக, அந்த நபர் பாம்பின் தலையை சர்வ சாதாரணமாக பிடித்த போது, பின்னால் வாகனத்தில் இருந்த மக்கள் அனைவரும் அவரை அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி, கத்தி கூச்சல் போடுவதும் அதில் கேட்கிறது.
இதனை பகிர்ந்த அதிகாரி பர்வீன் கஸ்வான், வன விலங்குகளின் வாழ்விடத்திற்கு சென்று அதனை தொந்தரவு செய்கிறாரா அல்லது விபத்து நேராமல் இருக்க அதனை காப்பாற்றுகிறரா என குறிப்பிட்டு உங்கள் பார்வை என்ன என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். மேலும், தென் இந்திய பகுதியில் உள்ள காட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சாதாரணமாக நடு ரோட்டில் சென்று பாம்பை சாலையில் இருந்து அகற்றும் நபர் தொடர்பான வீடியோ, பார்ப்போர் பலரையும் சில்லிட வைத்துள்ளது.
Your views on it. Going in wildlife habitat & disturbing or saving it from road accident. Video is from important wildlife habitual in south India. @BoskyKhanna pic.twitter.com/7W110lg3CD
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 30, 2022