Viral Video: பாம்பிற்கு உதவி செய்த நபர்... படமெடுத்து கோபத்தை வெளிக்காட்டிய காட்சி
நபர் ஒருவர் மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றினை மீட்டு வனப்பகுதியில் விட்ட நிலையில், குறித்த பாம்பு நபரிடம் படமெடுத்து கோபத்தை வெளிக்காட்டிய காட்சி வைரலாகி வருகின்றது.
படமெடுத்து நின்ற பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இங்கு நபர் ஒருவர் விஷம் நிறைந்த நல்ல பாம்பு ஒன்றினை மீட்டு பையில் வைத்து வனப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.
பின்பு அதனை அங்கு விடுவித்த நிலையில், குறித்த பாம்பு நபரை எதிர்த்து படமெடுத்து சீறி தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |