மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
டீக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதிலும் மசாலா டீ என்றால் சொல்லவே தேவை இல்லை.
மசாலா டீ என்ன தான் வீட்டில் செய்தாலும் கடையில் வாங்கி குடிப்பது போல சுவை இல்லை என வருத்தப்படுகிறீர்களா? இதுபோன்றவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த மசாலா டீயை குடிப்பதால் நமக்கு மன அழுத்தம் நீங்கும். பலுவகால நோய் தொற்றுக்கள் வராது இதுபோல பல நன்மைகள் இருக்கிறது. இந்த பதிவில் ஒரு சுவையான டீ மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 2 அல்லது 3 கிராம்பு
- 1/2 அல்லது 3/4 துண்டு
- பட்டை 4
- ஏலக்காய் 2
- மிளகு 1
- சுக்கு இஞ்சி ஒரு சிறிய துண்டு
- 1 1/2 கப் தண்ணீர்
- 1 கப் பால்
- 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரை
- 3 அல்லது 4 டீ Bags
- டீ தூளாக இருந்தால் 2 முதல் 3 ஸ்பூன்
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மசாலா பொருட்களையும் மிதமான தீயில் இரண்டு நிமிடம் வறுத்து ஆறவைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் டீ போடும் பாத்திரத்தில் ஒரு கப் பால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இது ஒரு கொதி வந்ததும் இரண்டு தேக்கரண்டி டீ தூள் அரை தேக்கரண்டி அரைத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
இந்த டீயில் இருந்து வரும் வாசனைவீடு முழுக்க இருககும். இதன் பின்னர் அடுப்பில் இருந்து டீயை இறக்கி வடிகட்டியில் வடித்து சுட சுட பருகவும். இது மழைகாலத்தில் செய்து குடித்தால் இன்னும் சுகமான உணர்வு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |