வீட்டில் கொத்தமல்லியும் கறிவேப்பிலையும் இருக்கா? இந்த சட்னியை ஒரு முறை செய்து பாருங்க
வீட்டில் அவசரமாக சமைக்க வேண்டும் எனில் எதுவும் இல்லாத போது கொத்தமல்லி கறிவேப்பிலை இரண்டையும் வைத்து நாம் ஒரு ரெசிபி செய்து சாப்பிடலாம்.
இந்த சட்னி தோசை இட்லிக்கு சிறப்பாக இருக்கும். இது செய்வதற்கும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும். இதை செய்யுத் துறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 5
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - 1 இன்ச்
- புளி - 2
- இன்ச் உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும். அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். பின் அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி தனியே எடுத்து வைக்க வேண்டும்.
பின்பு ஒரு மிக்ஸியில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பஞ்சு போல அரைத்துகெ்கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியின் மேலால் போட்டு நன்றாக கிளற வேண்டும். இப்படி செய்து எடுத்து இட்லி தோசையுடன் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |