மாதம்பட்டி ரங்கராஜ் மனைவியை பிரிந்துவிட்டாரா? மீண்டெழும் விவாகரத்து சர்ச்சை
மாதம்பட்டி ரங்கராஜ் அவரின் மனைவியை பிரிந்து விட்டார் என்று கிளம்பிய வதந்திக்கு தக்க பதிலடிக் கொடுத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சமீபக்காலமாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை ரங்கராஜ் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
அதற்கு ஏற்றால் போல் ஜாய் கிரிஸில்டாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரங்கராஜ் பற்றியே பதிவுகளை தொடர்ந்து போட்டு வருகிறார்.
மனைவி கொடுத்த ரியாக்ஷன்
இந்த நிலையில் ரங்கராஜ்- மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் சில போஸ்ட்டுகளை போட்டிருக்கிறார்.
அதாவது, சில வாரங்களுக்கு முன்பு ரங்கராஜுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “ஆம் நான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி தான்” என கருத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
அதே போன்று ஒரு குடும்ப விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, “கோடி அருவி கொட்டுதே உன் மேல..” என்ற பாடலை ஒரு கல்லூரியில் மாணவர்கள் பாடிய வீடியோவை ரங்கராஜை Tag செய்து பகிர்ந்திருக்கிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள், இப்படியெல்லாம் செய்வதால் ரங்கராஜும், அவருடைய மனைவியும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என்பதனை மறைமுகமாக கூற வருகிறார்களா? என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |