சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படியா? மீண்டும் கொளுத்தி போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்!
சர்ச்சைகளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

அதனால் ரங்கராஜ் குறித்து பலரும் எதிர்மறை விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றார்கள். பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுட்டு வருகின்றது.
தற்போது தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையிலும் அது குறித்து கண்டுக்கொள்ளாமல் அசால்ட்டாக தனது தொழில், குடும்பம் என வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்.

மாதம்பட்டி ரங்கராஜின் இந்த மோசமான செயல் குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், எதையும் பொருட்ப்படுத்தாமல் தனது முதல் மனைவி மற்றும் 2 மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |