ஜாய் கிரிசில்டாவுக்கு நீதி கேட்டு களத்தில் இறங்கிய திருநங்கை.. உடனே பிரபலம் கொடுத்த ரிப்ளை
“மாதம்பட்டி ரங்கராஜால் பாதிக்கப்பட்ட ஜாய் கிரிசில்டாவிற்கு துணையாக நான் இருக்கிறேன்..” என தனுஜா சிங்கம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
திருநங்கை தனுஜா தரமான ரிப்ளை
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார். அப்போது இருதரப்பு விசாரணை நடைபெற்றது என்பதால் நிறைமாதக்கர்ப்பிணியான ஜாய் கிரிசில்டாவும் வருகை தந்திருந்தனர்.
இது குறித்து பேசிய திருநங்கை தனுஜா சிங்கம், “ பெண்கள், கணவர்கள் தவறு செய்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடைமைகளை யாராவது கேட்டால் கொடுப்பீர்களா? அதே போன்று கணவரையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஜாய்யின் போராட்டத்திற்கு என்னுடைய ஆதரவு இருக்கும். அவருக்காக பேச நாங்கள் இருக்கிறோம்..” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளிக்கு ஜாய் கிரிசில்டா ரிப்ளையும் கொடுத்திருக்கிறார். இந்த பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |