கொலை மிரட்டல் விடும் ரங்கராஜ்.. குழந்தைக்காக ஜாய் கிரிஸில்டா அதிரடி
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பினர் ஜாய் கிரிஸில்டாவிற்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், சமூக வலைத்தளப்பக்கங்களையும் இல்லாமல் செய்வதாகவும் ஜாய் கிரிஸில்டா நேரலையில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார்.
கொலை மிரட்டல் விடும் ரங்கராஜ் தரப்பு
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா- மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரம் பற்றிய தகவல்களை தினம் தினம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதற்கிடையில் நேரலையில், “என்னுடைய மகனுக்கும், எனக்கும் ரங்கராஜால் ஆபத்து உள்ளது. கொலை மிரட்டல்கள் எல்லாம் வருகிறது. மகனுக்காக ஆரம்பித்த இன்ஸ்டாகிராம் கணக்கு ரிபோட் செய்து இல்லாமல் செய்யப்பட்டது. DNA பரிசோதனை செய்யப்போவதாக கூறிய ரங்கராஜ் இதுவரையில் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை.

எனக்கு எந்த பயமும் இல்லை. இது அவரை குழந்தை தான். அதற்கான நீதியை நான் வாங்கிக் கொடுப்பேன். ரங்கராஜ் அறிக்கை விட்டு 1 மாதம் ஆகி விட்டது. அதற்கு இதுவரையில் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. இது எனக்கு சற்று கவலையாக உள்ளது.” என பேசியிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |