6 மணி நேர விசாரணை.. அப்படி என்ன நடந்தது? ஜாய் கிறிஸில்டா ஊடகங்களுக்கு எச்சரிக்கை!
“இனி மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தெரியாமல் ஊடகங்களில் தவறான கருத்துக்களை எழுதவும் பகிரவும் வேண்டாம்” என ஜாய் கிறிஸில்டா பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புகார் கொடுத்த ஜாய் கிறிஸ்டா
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியுடன் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கடுப்பான ஜாய் கிரிஸில்டா, “ தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்னுடைய குழந்தைக்கு தந்தை. அவர் எனக்கு சரியானதொரு பதில் கூற வேண்டும். அது வரையில் என்னுடைய போராட்டம் தொடரும்...” என புகார் கொடுத்தாக பகிர்ந்துள்ளார்.
6 மணி நேர விசாரணை
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிறிஸ்டா வழக்கு தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சுமாராக 6 மணி நேரம் ஜாய் கிறிஸ்டாவை விசாரணை செய்துள்ளனர். வயிற்றில் குழந்தையுடன் காத்திருந்து பேட்டிக் கொடுத்த ஜாய் கிறிஸ்டா, “ மீடியாவின் உண்மையை மட்டும் எழுதுங்க.உங்க வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது இனி நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய குழந்தைக்கான பதில் கிடைக்கும் வரை போராடுவேன். என்னை கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றல.. என்னை கல்யாணம் பண்ணீட்டாங்க. சுமாராக 2 வருடங்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் பேசுபவர்களுக்கு என்னுடைய குழந்தையின் சாபம் சும்மா விடாது. எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்களை மாத்திரம் ஏன் கேள்வி கேட்குறீங்க, நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜாய் கிறிஸ்டாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இணையவாசிகள் ஆதரவாக பேசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
