அப்பாவுக்கே சவால் விடும் மகன்- ஜாய் கிரிஸில்டா பதிவால் மனம் இறங்கிய நெட்டிசன்கள்
மாதம்பட்டி ரங்கராஜ்க்கு சவால் விடும் வகையில் ஜாய் கிரிஸில்டா போட்ட காணொளி இணையவாசிகளை மனம் இறங்க வைத்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார்.
மனம் இறங்க வைத்த குழந்தை
இந்த நிலையில், அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் வாழ்ந்த ஆதாரங்களை தினமும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், ஜாய் கிரிஸில்டாவிற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தனிப்பட்ட முறையில் அனுப்பிய மற்றுமொரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதில், ஜாய் அவர் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் என்ன நடக்கும் என தெரியவில்லை என்றும், வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் பேசியிருக்கிறார். இவரின் இந்த காணொளியை பார்க்கும் சற்று முகம் சுழிப்பாக உள்ளது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம், மகன் ராஹா ரங்கராஜ் கால் அசைத்து விளையாடும் காணொளியை பகிர்ந்து, வாங்க daddy வாங்க இப்போ யாரு இந்த account eh suspend பண்ணுறாங்கனு பாக்குறேன்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த பின்னர், நெட்டிசன்கள் மனம் இறங்கி தங்களின் ஆதரவை மகனுக்கு வழங்கி வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |